Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்கள்  மகிளா சக்தி கேந்திரா  திட்டத்தின் கீழ் பணிபுரிய  மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு  அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்  குறித்து தன்னார்வ குழு உறுப்பினர்கள் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமான பெண்கள் மகிளா சக்தி கேந்திரா  திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய மகளிர் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பதவி :  மகளிர் நல அலுவலர்

தகுதி: MSW / PG Degree in Humanities and Social studies

பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழி தெரிந்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு :  அதிகபட்சமாக 35 வயது

சம்பளம் : 35,000/-

காலியிடங்கள் : 1


பதவி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

தகுதி : MSW/ UG Degree in Humanities and social studies /PG Degree in social studies or Psychology

பெண்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழி தெரிந்திருத்தல் வேண்டும்.


வயது வரம்பு :  அதிகபட்சமாக 35 வயது


சம்பளம் : 20,000/-


காலியிடங்கள் : 2


கடைசி தேதி : 04.10.2019


விண்ணப்பிக்கும் முறை

 தகுதியும் விருப்பமும் உடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் Bio data மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

 மாவட்ட சமூக நல அலுவலர்
 மாவட்ட சமூக நல அலுவலகம்
 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
 கோரம்பள்ளம்
 தூத்துக்குடி-628 101
 தொலைபேசி எண் : 0462-2325606

 மேலும் விபரங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.